பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி வருவாய்த்துறையினர் போராட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தினர். வருவாய் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-02-27 06:32 GMT

வருவாய்த்துறையினர் போராட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தினர். வருவாய் துறையின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கு வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் சுகந்தி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி சிறப்புரையாற்றினார்.
Tags:    

Similar News