மஞ்சப்பை இயந்திரத்தை திறந்து வைத்த சபாநாயகர்

7வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை இயந்திரத்தை சபாநாயகர் திறந்து வைத்தார்.

Update: 2024-02-04 08:39 GMT

மஞ்சப்பை இயந்திரத்தை திறந்து வைத்த சபாநாயகர்

நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் (பொருட்காட்சி திடல்) நேற்று (03.02.2024) மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும், 7வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் மஞ்சப்பை மிஷின் வைக்கப்பட்டுள்ளது.

ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை உடனடியாக கிடைக்கும் இந்த இயந்திரத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்,மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News