மாணவ்ர்களை மலர்த்தூவி வரவேற்ற ஆசிரியைகள்

பள்ளிகள் திறப்பையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து நெல்லில் அகரம் எழுத வைத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-06-10 05:55 GMT

மாணவர்களை வரவேற்ற ஆசிரியைகள் 

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். முன்னதாக மாணவிகள் பள்ளிகளின் அருகில் அமைந்துள்ள கோயில்களில் மாணவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தி விட்டு பள்ளிகளுக்கு சென்றனர். மயிலாடுதுறையில் அமைந்துள்ள டி பி டி ஆர் தேசிய துவக்க பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து, திலகம் அணிவித்து, மலர் மாலை அணிவித்து நெல்லில் அகரம் எழுதச் செய்து வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News