மின்கம்பி உரசியதில் லாரி எரிந்து சேதம்

சேலம் அருகே மின்கம்பி உரசியதில் லாரி எரிந்தது சேதமானது.

Update: 2024-03-02 06:56 GMT

 சேலம் அருகே மின்கம்பி உரசியதில் லாரி எரிந்தது சேதமானது.  

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு லாரி ஒன்று சோபாவுக்கான பஞ்சு பாரம் ஏற்றி வந்தது. ஓமலூர் அருகே பனங்காடு, நல்லம்மாள் திருமண மண்டபம் அருகில் வந்த போது லாரி மீது மின்கம்பி உரசி தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென பரவி லாரி முழுவதும் பற்றி எரிந்தது. தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ்பாபு தலைமையில் 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். லாரியில் ஏற்று கொண்டுவரப்பட்ட சோபா தயாரிக்க பயன்படுத்தும் பஞ்ச் முற்றிலும் எரிந்து சேதமானது.

இதில் லாரி முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News