வாழைக்காய்களை போராடி பறித்து சென்ற தொண்டர்கள் !

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுகூட்டத்தில் வாழை மரங்களிலிருந்து வாழைத்தார்களை பொதுமக்கள் எடுத்துச் சென்றது வேடிக்கையாக இருந்தது.

Update: 2024-04-01 09:23 GMT

வாழைக்காய்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் சாலையின் இருபுறமும் அலங்கார தோரணமாக வாழை மரங்கள், செங்கரும்பு கட்டப்பட்டு செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பேசி முடித்துவிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். இதனிடையே அவர் சென்ற பிறகு சாலைகளில் இருபுறமும் அலங்கார தோரணங்களாக கட்டப்பட்டிருந்த வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்களை கட்சி தொண்டர்கள் போட்டி போட்டு மரத்தில் ஏறி பறித்து கொண்டு சென்றது வேடிக்கையாக இருந்தது.
Tags:    

Similar News