மழையால் இடிந்து விழுந்த பள்ளிவாசல் சுற்றுச்சுவர்

மரக்காணத்தில் கனமழை காரணமாக பள்ளி வாசலின் எதிரே இருந்த சுற்று சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2024-01-11 16:09 GMT

இடிந்து விழுந்த சுற்று சுவர் 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சால்ட் ரோட்டில் அமைந்துள்ளது ஜாமியா பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலில் மரக்காணம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தினமும் தொழுகை நடத்துவது வழக்கம். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் வீடுகள் பாதிப்புக்கு உள்ளானது. இதுபோல் மரக்காணம் பள்ளிவாசல் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக இன்று காலை எதிர்ப்பாராத விதமாக பள்ளிவாசலின் எதிரில் இருந்த சுற்றுசுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த சூழலில் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
Tags:    

Similar News