அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை முயற்சியால் தொழிலாளர்கள் அதிர்ச்சி

உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

Update: 2024-07-01 05:41 GMT

தற்கொலைக்கு முயன்ற ஓட்டுநர் 

கோவை:கருமத்தம்பட்டி கிளையில் நேற்று அரசு ஓட்டுநர் பால்ராஜ் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே கிளையில் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படும் தகவல்களின்படி கிளை மேலாளர் கார்த்திகேயன் மற்றும் காளப்பட்டி ராஜேந்திரன் (எல்.பி.எஃப் செயலாளர்) ஆகியோர் தொழிலாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதன் காரணமாக ஓட்டுநர் பால்ராஜ் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ள நிலையில் பால்ராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கிளை மேலாளர் கார்த்திகேயன் மற்றும் காளப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருமத்தம்பட்டி கிளை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் பணியிடத்தில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News