மளிகை கடையில் திருடிய வாலிபர் கைது

சேல்ம மாவட்டம், பழைய சூரமங்கலம் பகுதியில் மளிகை கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-02 13:32 GMT

வாலிபர் கைது

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 62). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராமநாதன் கடையில் திருடியது பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சரவணன் (20), சண்முகம் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News