கோவை அருகே சிறுவனைச் சுற்றி வளைத்த தெரு நாய்களால் பரபரப்பு

கோவை அருகே சிறுவனைச் சுற்றி வளைத்த தெரு நாய்களிடம் இருந்து காப்பாற்றிய தந்தையின் சிசிடிவி கட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2024-06-29 08:50 GMT

சிறுவனை சுற்றி வளைத்த தெருநாய்கள்

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் நேற்று காலை அவரது மனைவி மற்றும் மகனுடன் வெளியில் சென்று விட்டு வந்துள்ளார்.வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவரும் அவரது மனைவியும் வீட்டிற்குள் சென்ற நிலையில் அந்த சிறுவன் தெரு நாய்களை கல்லால் அடிக்க முற்பட்டுள்ளான்.

இதனால் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நான்கைந்து நாய்கள் திடீரென சிறுவனை கடிக்க வந்துள்ளது. பயத்தில் சிறுவன் சத்தமிட்ட நிலையில் வீட்டிலிருந்து ஓடி வந்த அவனது தந்தை சிறுவனை காப்பாற்றியுள்ளார்.

இது அங்கிந்த சிசிடிவி யில் பதிவான நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News