பல்வேறு கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் இணைந்தனர்

குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் 20 தொண்டர்கள் இணைந்தனர்.

Update: 2024-03-12 11:56 GMT

குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் 20 தொண்டர்கள் இணைந்தனர்.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் 20 தொண்டர்கள் இணைந்தனர்.பாராளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், அனைத்து அரசியல் கட்சியினர் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியிலும், பிற கட்சியிலிருந்து, தங்கள் கட்சிக்கு ஆட்களை சேர்க்க குழு அமைத்து செயல்படுகிறார்கள் என்பது போல், பிற கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு உறுப்பினர்கள் இணைத்து வருகிறார்கள். இதனொரு கட்டமாக குமாரபாளையம் பா.ஜ.க.வில், பல்வேறு கட்சியை சேர்ந்த ஆண், பெண் உள்ளிட்ட 20 நபர்கள் வரதராஜன் தலைமையில், மாவட்ட பொது செயலர் வழக்கறிஞர் சரவணராஜன் முன்னிலையில் இணைந்தனர்.

இவர்களை மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து கூறினார்கள். இந்த இணைப்பு நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலர் சுகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜண்ணன், நகர பொது செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News