ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்

ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது .

Update: 2024-04-21 16:53 GMT

திருக்கல்யாணம் 

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது .

இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News