திருமாவளவன் சஸ்பெண்ட் - விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2023-12-20 10:28 GMT

ஆர்ப்பாட்டம் 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 141 எம்பி-களின் இடைநீக்கத்தை கண்டித்து தர்மபுரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இடைநீக்கத்தை எம்பிகளின் இடைநீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் தமிழ் அன்வர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜா ( எ) மன்னன், மாவட்ட துணைச் செயலாளர் ஆதிதமிழன், மாநில செயற்குழு உறுப்பினர் எம் எஸ் ராமன், தர்மபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், மாநில நிர்வாகிகள் கப்பல் செந்தில், சிவஞானம், கிள்ளிவளவன், சென்னகிருஷ்ணன், மாது (எ) மணிமாறன், தனலட்சுமி, மாவட்ட அமைப்பாளர்கள் அம்பேத்வளவன், விடுதலை மதி, மாவட்ட துணைச் செயலாளர் கம்சலா, நல்லை சீனி, தென்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் பொன் சுரேஷ், சங்கர், குமரன், சந்தான மூர்த்தி, ஆட்டோ கிருஷ்ணன் மற்றும் தர்மபுரி மைய மாவட்டத்தை சார்ந்த மண்டல,மாநில, மாவட்ட, தொகுதி,ஒன்றிய,நகர மற்றும் துணைநிலை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், முகாம் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News