வடியாத மழைநீரால் திருமழிசை பகுதியினர் அவதி

மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

Update: 2023-12-17 09:07 GMT

வடியாத மழைநீரால் திருமழிசை பகுதியினர் அவதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

'மிக்ஜாம்' புயலால் பெய்த கனமழையில் திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதில் மழைநின்று 10 தினங்கள் கழித்தும் திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட 9வது வார்டு பகுதிக்குட்பட்ட பட்டேல் தெருவில் மழைநீர் வடியவில்லை. இதனால் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் வடியாததால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் அலட்சியம் காட்டி வருவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்பது வார்டு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து

உள்ளனர்.

Tags:    

Similar News