தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு திருவையாறு விவசாயி கோரிக்கை !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு திருவையாறு விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-08 06:04 GMT

விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம் திருவையாறு தாலுக்கா மேல திருப்பந்துருத்தி கோணக்கடுங்கலாறு ஆறாவது அணை இ ஆர் எம் திட்டத்தின் படி கட்டப்பட்டு வருகிறது இந்த அணை ஏற்கனவே 25 வருடங்களுக்கு மேலாக சிறிய உழுவை இயந்திரங்கள் அணையின் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள நிலங்கள் உழவுப் பணியை செய்வதற்கு ஏதுவாக இரண்டு பக்கமும்சாய்தளம் அமைக்கப்பட்டு பயன்பட்டு வந்தது தற்சமயம் உழவு இயந்திரங்கள் செல்லாத வகையில் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இரண்டரை அடி அகலம் மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இதன்படி அமைத்தால் சிறிய இயந்திரங்களை இதன் வழியாக கொண்டு செல்ல இயலாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கவனத்திற்கு திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம் நிகழ்வு என்றும் தெரிவித்தேன். ஆனால் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து இப்பணி நடைபெறுவது ஏன் என்று புரியவில்லை உடன் மாவட்ட ஆட்சியர் நேரடி களாய்வு செய்திடவும் தவறான திட்டமிட்ட நீர்வளத்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன திருப்பந்துருத்தி சுகுமாரன் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News