திருவையாறு : சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கும் விழா   

திருவையாறு அருகே மணத்திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2024-03-21 01:37 GMT

சிபிஎம் கூட்டம் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருவையாறு ஒன்றியம், கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா, கட்சி நிதி வழங்கும் சிறப்பு பேரவை, மணத்திடல் புனித தோமையர் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம், கே.மதியழகன், ஆர்.பிரதீப் ராஜ்குமார், எம்.கதிரவன், பி.பழனிசாமி, நகரக்கிளை செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News