சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

பெருக வாழ்ந்தான் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-15 03:15 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

பெருக வாழ்ந்தான்  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மண்ணுக்குமுண்டான் ஏரிக்கரை மாதா கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பெருக வாழ்ந்தான் ஆவடைதேவன் குலம் பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி என்பவரின் மகன் இளங்கோவன், பெரியார் தெருவை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் மாணிக்கம், மண்ணுக்கு முண்டான் ஜீவா தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் பரமேஸ்வரன் ,தெற்கு மண்ணுக்கு முண்டான் பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மகன் கிளிண்டன் மற்றும் மண்ணுக்குமுண்டான் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் விஜயகுமார் ஆகிய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . மேலும் அவர்களிடம் இருந்து ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News