அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் பேட்டி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் வசதி செய்து கொடுத்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

Update: 2024-03-15 07:13 GMT

பேட்டி அளித்த போது

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூபாய் 8 கோடியே 45 லட்சம் மதிப்பில் ஆஞ்சியோகிராம் கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடந்த நான்காம் தேதி திறந்து வைத்தார் . இதனை தொடர்ந்து இருதய நோய் நிபுணர் டாக்டர் சக்கரவர்த்தி முதல் நோயாளிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

இந்த ஆஞ்சியோகிராம் வசதி என்பது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும் . உயிர்காக்கும் சிகிச்சைக்கான வசதி ஏற்படுத்தித் தந்த முதலமைச்சருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News