தூத்துக்குடி : கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது!

தூத்துக்குடியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-19 01:57 GMT

பைல் படம் 

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆதாம் அலி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஆரோக்கியபுரம் சர்ச் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர் மேல அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் டேனியல் ராஜ் (எ) சாம் டேனியல்ராஜ் (24) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் டேனியல்ராஜ் (எ) சாம் டேனியல்ராஜை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News