ரயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

தூத்துக்குடி அருகே மீளவிட்டானில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த வாலிபர் மீது ரயில் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-03-14 03:35 GMT

பைல் படம் 

தூத்துக்குடியில் நேற்று இரவு தூத்துக்குடி - சென்னை எக்ஸ்பிரஸ் மீளவிட்டான் - தூத்துக்குடி ரயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து இருந்துள்ளார். ரயில் வண்டி பைலட் ஹாரன் அடித்ததும் அவர் எழுந்துள்ளார். அப்போது அவர் மீது ரயில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார். ரயில் மோதி இறந்த நபர் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மீளவிட்டான் விஏஓ கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News