அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர்கள் கைது

காரிமங்கலம் நகர பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.2000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-09 02:21 GMT

காவல் நிலையம் 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் நரசிம்மன் மற்றும் காவலர்கள் நேற்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் நகர பகுதியில் 2 கடைளில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் இருந்த சரவெடிகள் உள்பட 2 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர்கள் 2 பேரை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.
Tags:    

Similar News