கோவையில் நாளை முப்பெரும் விழா: எம்எல்ஏ அழைப்பு

கோவையில் நாளை முப்பெரும் விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-14 12:05 GMT

எம்எல்ஏ ராஜேந்திரன்

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவையில் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

அதாவது, மறைந்த முதலமைச்சர் மு.க.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி அளித்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்மிகு வெற்றிக்கு கட்சியை வழி நடத்தி சென்ற தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

எனவே, மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர், கோட்ட, ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முன்னோடிகள்,

வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News