விவசாயிகளுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உளவியல் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-12 13:39 GMT

வேளாண்மை பயிற்சி 

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள சொரையூர் கிராமத்தில் உழவியல் தொழில்நுட்பங்கள் மூலம் தெரிந்து கொள்ள விவசாயிகளுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தனியார் வேளாண்மை கல்லுரி ஆராய்ச்சி துறை இயக்குனர் ரகுபதி மதியரசு தலைமை தாங்கினார்.

பயிற்சியை நபார்டு வங்கி திட்ட வளர்ச்சி அலுவலர் ஸ்யம்பிரியா தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை துறையில் விவசாயிகள் பயிரிடும் பயிர்களில் அபிவிருத்தியை பெருக்க பல்வேறு வழிகாட்டுதல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மூன்றாவது நாள் பயிற்சி முகாமில் சிறுதானிய மகத்துவ மையத்தில் நேரடி கள பயிற்சியும், இயற்கை விவசாயத்திற்க்கு இடு பொருட்கள் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டதோடு கையேடு புத்தகமும் வழங்கப்பட்டது.

3 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News