கோவையில் முப்பெரும் விழா: தி.மு.க.வினர்னருக்கு அழைப்பு

கோவையில் நடக்கும் முப்பெரும் விழாவில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என டி.எம்.செல்வகணபதி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-06-13 15:02 GMT

எம்பி

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடக்கிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு தி.மு.க.வை வழிநடத்தி சென்ற முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா என இந்த முப்பெரும் விழாவில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இந்நாள், முன்னாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, விவசாய அணி, மருத்துவர் அணி, வக்கீல் அணி, பொறியாளர் அணி,

தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, ஆதி திராவிடர் நலக்குழு உள்பட அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி, பூத்கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News