டூவீலர் விபத்தில் மூன்று பேர் படுகாயம்

திருச்சி- கரூர் சாலையில் நடந்த டூவீலர் விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2024-04-24 11:22 GMT

திருச்சி- கரூர் சாலையில் நடந்த டூவீலர் விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, மலைக்கோவிலூர் அருகே உள்ள ஜனதா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுவாமிநாதன் வயது 47. இதேபோல, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர், செல்வம் நகரை சேர்ந்தவர் ரவி மகன் விக்னேஷ் வயது 17. இவர்கள் இருவரும் ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5:30- மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.

டூவீலரை சாமிநாதன் ஓட்டிச் சென்றார். இவர்களது டூவீலர் மாயனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லபாண்டியன் மகன் நிதிஷ் வயது 21 என்பவர், மற்றொரு டூவீலரில் வேகமாக சென்று, சாமிநாதன் ஓட்டிச் சென்ற டூவீலருக்கு முன்பாக சென்று, திடீரென தனது வாகனத்தை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், டூவீலரில் வலது புறம் திருப்பியதால், சாமிநாதன் ஓட்டிய டூ வீலர் நிதிஷ் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு டூவீலர்களும் கீழே விழுந்து, வாகனத்தில் பயணித்த மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

உடனடியாக இவர்களை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், சாமிநாதனை சேலம் அரசு மருத்துவமனையிலும்,விக்னேஷ் மற்றும் நிதிஷ் ஆகியோரை திருச்சி கே எம் சி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாமிநாதனின் மனைவி விஜயா வயது 42 என்பவர், அளித்த புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை விபத்து ஏற்படும் பகையில் ஓட்டிய நிதிஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags:    

Similar News