பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது !
ஈசநத்தம் புதூர் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 300 பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-08 10:20 GMT
சூதாட்டம்
ஈசநத்தம் புதூர் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 300 பறிமுதல். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஈசநத்தம் புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 6ஆம் தேதி மாலை 4 மணியளவில், ஈசநத்தம் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த கண்ணன், ஈசநத்தம் புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், ஈசநத்தம் குன்னம்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.