கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது  செய்யப்பட்டார். 

Update: 2024-02-18 08:10 GMT

கைது 

தூத்துக்குடியில் கடந்த 17.01.2024 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பட்டி சங்குகுளி காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சேதுராமன் (57) என்பவரிடம் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், மேட்டுப்பட்டி சங்குகுளி காலனியைச் சேர்ந்த சக்திவேல் மகன் நந்தகுமார் (23) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.  நந்தகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்  ஆதாம் அலி  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர்  கோ. லட்சுமிபதி, நந்தகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர்  உத்தரவின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்  ஆதாம் அலி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News