இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து!

கோவை உக்கடம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை உயிரிழந்தார்.

Update: 2024-06-26 14:14 GMT

பைல் படம்

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா தனியார் பள்ளிக்கு அப்பள்ளியின் ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். உக்கடம் லாரி அசோசியேஷன் பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டு இருந்தபோது அப்பகுதியில் உள்ள லாரிப் பேட்டைக்கு வந்த டிப்பர் லாரி ஆசிரியை அனிதா வந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் மோதிய வேகத்தில் ஆசிரியை தூக்கி வீசப்பட்டு சாலையின் நடுவே சம்பவ இடத்திலேயே ஆசிரியை உயிரிழந்தார்.

இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் உடனடியாக அங்கு இருந்து டிப்பர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை காவல் துறையினர் சரி செய்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆசிரியை லாரி மோதி உயிரிழந்த சம்பவம் உடன் பணியாற்றும் ஆசிரியர்கால் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News