திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-28 10:32 GMT

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 16க்கும் மேற்பட்ட தூய்மை ஒப்பந்த பணியாளர்கள் Qpms என்ற ஒப்பந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமித்து உள்ளது திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும் பதினாறுக்கும் மேற்பட்ட யு பி எம் எஸ் ஒப்பந்ததாரர் மூலம் பணியில் அமர்த்தப்பட்டு பணி செய்து வந்தனர் நிலையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்து அடித்து வந்தனர்.

இந்தப் பிரச்சனை தொமுச சங்கத்திற்கு தெரியவந்ததை அடுத்து நேற்று இரவு முதல் வந்த பணியாளர்கள் தொமுச சங்கத்தின் ஆதரவுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு முதல் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களுடன் மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் ஒப்பந்த நிர்வாகம் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் மருத்துவமனை தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News