திருச்செங்கோடு - கொக்கராயன் பேட்டை; புதிய பஸ் சேவை துவக்கம்

திருச்செங்கோடு - கொக்கராயன் பேட்டை வழித்தடத்தில் புதிய பஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-07 09:19 GMT

திருச்செங்கோடு - கொக்கராயன் பேட்டை வழித்தடத்தில் புதிய பஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வளர்ந்து வரும் பெரும் நகரங்களில் ஒன்றானது ஆகும், இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வணிக நோக்கங்களுக்கு மற்றும் சொந்த காரணங்களுக்காக பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.திருச்செங்கோட்டில் இருந்து கோவை செல்ல ஈரோடு வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன் பேட்டை வழியாக நேரடியாக கோவை செல்ல பேருந்து வசதி துவக்கப்பட உள்ளது. இதற்கு ஆவண செய்த தமிழக முதல்வருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் திருச்செங்கோடு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Tags:    

Similar News