திருச்செங்கோடு நகராட்சி கோடைகால குடிநீர் விநியோக விபரம்

கோடைகாலத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாத வண்ணம் திருச்செங்கோடு நகராட்சி செயல்பட்டு வருவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-07 03:57 GMT

 திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம்  

திருச்செங்கோடு நகராட்சியில் வசிக்கும் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1,10,000. இந்நகராட்சிக்கு சொந்தமான ஆவத்திபாளையம் மற்றும் புள்ளாக்கவுண்டம்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து பாதுகாக்கபட்ட குடிநீர் தினமும் 14.00 MLD பெறப்பட்டு சந்தைபேட்டை நீருந்து நிலையத்தில் உள்ள 15.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் நிரப்பப்பட்டு அங்கிருந்து ஐந்து மின் மோட்டார்கள் மூலம் நகராட்சி பகுதிகளில் உள்ள 72.30 இலட்சம் கொள்ளளவு கொண்ட 18 மேல் நிலை தொட்டிகள் மற்றும் ஒரு தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், குடிநீர் அல்லாது பிற உபயோகத்திற்கு நகராட்சி ஆழ் குழாய் கிணறுகளில் உள்ள பவர் பம்பு மூலமாகவும் சின்டெக்ஸ் தொட்டிளில் நீர் நிரப்பப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, எதிர் வரும் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுபாடு ஏதும் ஏற்படா வண்ணம் திருச்செங்கோடு நகராட்சி செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என நகராட்சி ஆணையாளர் சேகர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News