வரி வசூல் செய்யும் பணி தீவிரம் !

திருச்செங்கோடு நகராட்சியில் கடந்த 5 நாட்களாக கடும் வசூல் செய்யும் பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.

Update: 2024-03-11 05:40 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் நகராட்சிக்கு சுமார் 8 கோடி ரூபாய் க்கு மேல் வரி வசூல் பாக்கி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி ஆணையாளர் சேகர் கடந்த 5 நாட்களாக கடும் வசூல் செய்யும் பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ளார், தனியார் திருமண மண்டபங்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரடியாக சென்று தொழில் வரி சொத்து வரி போன்றவற்றை கராராக வசூல் செய்து வருகிறார்.போதிய கால அவகாசம் கொடுத்தும் வரி செலுத்தாத தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றிற்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிக வரி பாக்கியினை வைத்துள்ளவர்களின் பெயர்களை நகராட்சியின் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் ஆக வைக்கப்படும் என ஆணையாளர் சேகர் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News