தகராறு செய்த இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு !

திருநெல்வேலி மாவட்டம் மளிகை கடையில் இரண்டு சிறுவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளதால் போலீசார் சிறுவர்களை கைது செய்து திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் அடைந்தனர்.

Update: 2024-03-05 05:47 GMT

கூர்நோக்கு இல்லம்

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியை சேர்ந்த முத்தப்பா வீட்டுடன் இணைந்து மளிகை கடை நடத்தி வருகின்றார். இவரது கடைக்கு நேற்று வந்த இரண்டு சிறுவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இதனைக் கேட்க வந்த முத்தப்பா மனைவி ஜெசிமோல்,மாமியார் பெல்லா ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர்.இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இரண்டு சிறுவர்களை கைது செய்து திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் நேற்று (மார்ச் 3) அடைந்தனர்.
Tags:    

Similar News