திருவாதிரை திருவிழா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது.

Update: 2023-12-28 02:56 GMT

 சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோபூஜை, ஆருத்ரா தரிசனம் நடராஜ பெருமாள் வீதி உலா ஆகியவை நடைபெற்றது. கோவிலில் இருந்து தொடங்கிய வீதி உலா முக்கிய ரதி வீதி வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. இதில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News