பாதியில் நின்ற மீன்பாசி குத்தகை ஏலம்!

மீன்பாசி குத்தகை ஏலம் விட விவசாயிகள் கடும் எதிர்ப்பு.

Update: 2024-03-13 17:40 GMT

மீன்பாசி குத்தகை ஏலம் நிறுத்தி வைப்பு

திருவாலங்காடு ஊராட்சியில் அமைந்துள்ளது கூடல்வாடி பட்டரை ஏரி. 35 ஏக்கரில் அமைந்த இந்த ஏரி நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில், 2024 - 25ம் ஆண்டுக்கான ஏரி மீன்பாசி குத்தகை ஏலம் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி நடைபெற்றது. 

மீன்பாசி குத்தகை ஏலம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் காதம்பரி தலைமையில் திருவாலங்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. ஏலம் கேட்க அதே கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் வரவோலை வாயிலாக பணம் செலுத்தி இருந்தனர்.  ஏரியை ஏலம் விட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஏலம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News