திருவண்ணாமலை : தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள்

வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் ஆரணி உட்கோட்டத்தில் 33 ஏரிகள் நிரம்பியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-12-03 11:51 GMT

நிரம்பிய ஏரிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியக்கா பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கடந்த 6 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் உற்பத்தியாகும் கமண்டல நாக நதி ஆற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் ஆரணி பொதுப்பணித்துறை உட்கோட்டத்தில் உள்ள 172 ஏரிகளில் அய்யம்பாளையம், குன்னத்தூர், மலையாம்பட்டு, ராட்டினமங்கலம், அக்காரபாளையம் உள்பட 33 ஏரிகள் நிரம்பியதாக ஆரணி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்மழை பெய்தால் மேலும் 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதனிடையே இந்த 33 ஏரிகள் நிரம்பியுள்ளதால் 5,000 க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழை நீடிப்பதால் சாத்தனூர் அணையில் இருந்து தொடர்ந்து 1570 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கனமழை பெய்து வருகிறது.  மாவட்டத்தில் உள்ள 697 பொதுப்பணித்துறை ஏரிகளில் 129 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. 60 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இந்நிலையில், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் நேற்று மாலை நிலவரப்படி 117.15 அடியாக உயர்ந்திருக்கிறது. அணையின் நீர் கொள்ளளவு 6908 மில்லியன் கன அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1825 கன அடி நீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 1570 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறக்கப்பட்டுள்ளது. அதனால், தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டுள்ளது.

Tags:    

Similar News