விஜயகாந்த் மறைவு - தமாகா அஞ்சலி

ஓமலூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவையொட்டி தமாகா சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

Update: 2023-12-29 04:54 GMT
விஜயகாந்த் மறைவிற்கு தமாகா அஞ்சலி 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி சேலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் அவரது உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், ஓமலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலை அருகே அவரது திருவுருவப் படத்திற்கு மேற்கு மாவட்ட தமாகா தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர் குலோத்துங்கன், வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், சேதுராமன், சங்ககிரி ரத்தினம், மேச்சேரி தமிழ், நகரத் தலைவர்கள் மணிகண்டன், சுப்பிரமணியம், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் ரகுநந்தகுமார் உள்ளிட்ட தமாகா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News