திருமுருகன்பூண்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றவரை கைது செய்து 13 1/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-20 12:08 GMT

காவல் நிலையம்

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது! திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக திருமுருகன் பூண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது பூலுவபட்டி சோதனை சாவடி அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் இளையராஜா (வயது 34)என்பரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 13 1/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது...

Tags:    

Similar News