செங்கோட்டையில் புகையிலை விற்ற கடைக்கு சீல்; ரூ.30,000 அபராதம்

செங்கோட்டையில் புகையிலை விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-07-01 15:07 GMT

சீல் வைக்கப்பட்ட கடை

தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான ஆய்வுக்குழு, செங்கோட்டை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை விற்பனை செய்த, மீனாட்சி என்பவரது பெட்டி கடைக்கு சீல் வைத்ததுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மற்றொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியில் உள்ள கடைகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர் ‌.

Tags:    

Similar News