நத்தக்காடையூர் அருகே கள் இறக்கிய முதியவர் கைது

நத்தக்கடையூர் அருகே சட்டத்திற்கு புறம்பாக கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காங்கேயம் காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-04-30 04:00 GMT

பைல் படம் 

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே மருதுறை பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக காங்கேயம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் தலைமையில் காவல்துறையினர் நேற்று இரவு 7:00 மணிக்கு மருத்துறைப் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அரண்மனை காடு பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தென்னை மரங்களில் பானை கட்டி கள் உற்பத்தி செய்து இறக்கி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள கள் இறக்கியதாக தோப்பின் உரிமையாளர் சுப்பிரமணி வயது 64 என்ற முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து மொத்தம் 1 1/2 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டு கள் இறக்கிய மூன்று பானைகள் உடைத்து அளிக்கப்பட்டது. இது குறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News