பரளிப்புதூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடக்கம்

மதுரை- நத்தம் நான்கு வழி சாலையில் அமைந்துள்ள பரளிப்புதூர் சுங்கச்சாவடியில் நேற்று முதல் சுங்க கட்டண வசூல் தொடங்கியது.

Update: 2024-02-09 07:39 GMT

சுங்க சாவடி 

மதுரையில் இருந்து திருச்சி மேலுார் வழியாக 120 கி.மீ., துாரம், திண்டுக்கல் வழியாக 165 கி.மீ., தொலைவு உள்ளது. நான்கு வழிச்சாலையாக அமைந்துள்ள இந்த ரோடுகளில் வாகனங்கள் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்த இரண்டு வழித்தடங்களுக்கும் நடுவே மதுரை - நத்தம் (35 கி.மீ.,) நத்தம் - துவரங்குறிச்சி வழியாக (25 கி.மீ.,) மதுரை - திருச்சி ரோட்டில் இணையும் வகையில் 60 கி.மீ., தொலைவுக்கு புதிய நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் ரூ.2600 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலையை சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Tags:    

Similar News