அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் கனமழை காரணமாக அருவிய்யில் குளிக்க சுற்றுலா ப்யணீகளுக்கு குளிக்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-13 01:55 GMT
சுற்றுலா பயணிகளுக்கு தடை
தென்காசியில் சுற்றுலா தலமான குற்றாலத்தில் நீரின்றி வறண்டு கிடந்த நிலையில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர் வரத் துவங்கியது. இந்நிலையில் இன்று 2வது நாளாக கனமழை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குற்றாலம், மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாகவந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News