கஞ்சா கடத்தல்; கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது

காட்பாடி ரயில்நிலையம் அருகே 14 கிலோ கஞ்சாவுடன் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-12-20 13:36 GMT

 காட்பாடி ரயில்நிலையம் அருகே 14 கிலோ கஞ்சாவுடன் வந்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காட்பாடி ரயில்நிலையம் அருகே 14 கிலோ கஞ்சாவுடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி ரயில்நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக 3 பேர் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்ததை காட்பாடி போலீசார் கவனித்துள்ளனர். அவர்கள் கையில் வெள்ளை நிற பாலித்தீன் பை இருந்துள்ளது. உடனடியாக அந்த நபர்களை பிடித்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், அவர்கள் வைத்திருந்த பையில் மொத்தம் 14 கிலோ அளவுக்கு 6 பண்டல்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த ரஹீம்(46), உதயகுமார்(40), பட்டன் மாவட்டம் காரியம் சிக்டார் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(41) என்பது தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த 14 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News