சிவகாசியில் பட்டாசு ஆலை போர்மேன்களுக்கு பயிற்சி வகுப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலை போர்மேன்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-14 11:35 GMT
சிவகாசியில் பட்டாசு ஆலை போர்மேன்களுக்கு பயிற்சி வகுப்பு ஆரம்பம்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9 ஆம் தேதி நடந்த மிக கோர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பயிற்சியில் பங்கேற்காத 200 பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர்கள்,போர் மேன்கள் மற்றும் சூப்பர்வைசர்களுக்கு இரண்டு மாதத்திற்குள் பயிற்சி பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து சிவகாசி அருகே உள்ள சாட்சியார்புரத்தில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பட்டாசு தொழிலில் ஈடுபடும் போர்மேன்கள் மற்றும் சூப்பர்வைசர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பதினோருக்கும் மேற்பட்ட போர் மேன்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் பயிற்சிக்கு வந்துள்ளதாக தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News