உளுந்து சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

பயிர் மேலாண்மை குறித்து முதல் பயிற்சி வகுப்பு வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-06-12 06:00 GMT

பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து முதல் பயிற்சி வகுப்பு வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் ராம நாதன், உதவி இயக்குனர் தா.செல்லத்துரை, உதவி வேளாண் அலுவலர் வெங்கடேசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் மற்றும் தொண்டு நிறுவன பொறுப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News