சேலம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

சேலம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2024-06-22 04:15 GMT

சேலம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பல்வேறு வட்டாரங்களில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த முத்து, சேலம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், தலைவாசலுக்கும், நங்கவள்ளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) சண்முகம், மகுடஞ்சாவடி துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மகுடஞ்சாவடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், நங்கவள்ளி துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் என 5 அதிகாரிகள் இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News