உயிர் பலி வாங்க சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ்பார்மர்

Update: 2023-12-12 10:48 GMT

சாய்ந்து நிற்கும் டிரான்ஸ்பார்மர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி நாலாவது வார்டில் உள்ள கோல்டன் சிட்டி பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு மையம் உள்ளது .இதன் அருகே இப்பகுதி பொதுமக்களுக்காக மின்வாரியத்தின் மூலம் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு மாத காலமாக சாய்ந்த நிலையில், எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து உயிர் பலி வாங்கும் சூழ்நிலையில் உள்ளது.

குறித்து பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் மனுக்களாகவும் நேரடியாகவும் கோரிக்கை வைத்தும் ஏனோ மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.கடந்த மிக்ஜாம் புயல்,மற்றும் கனமழை நமக்கு குறைவாக இருந்ததால் இந்த ட்ரான்ஸ்பார்மர் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. ஆனால் வேகமான காற்று வீசினாலோ மழை பொழிந்தாலோ இந்த ட்ரான்ஸ்ஃபார்மர் எந்த நேரத்திலும் சூழ்நிலை உள்ளது . எனவே மழைக்காலங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தும் சீரமைக்காமல் இருப்பது ஏன் என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் இந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் என இப்பகுதிக்கு பொதுமக்கள் வேண்டுகோளாக உள்ளது நடவடிக்கை எடுப்பார்களா ?மின்வாரிய அதிகாரிகள்.

Tags:    

Similar News