எடப்பாடியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி இன்று நடைபெற்றது.

Update: 2024-06-18 10:42 GMT
ஜமாபந்தி மனு வழங்கியவர்கள்

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் முருகன் தலைமையில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை வழங்கினர்.  சேலம் மாவட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வைத்தியலிங்கம் முன்னிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பக்கநாடு, ஆடையூர், சித்தூர், பூலாம்பட்டி,நெடுங்குளம்,

வெள்ளரி வெள்ளி, ஆகிய பகுதி ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் வழங்கினர். இதில் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், துணை வட்டாசியர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News