சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆயுள் தண்டனை கைதிக்கு சிகிச்சை

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-12-26 03:30 GMT

சேலம் மருத்துவமனை 

சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சிறையில் பழனிசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News