திருச்சி : கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-08 15:01 GMT

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இளங்கலை பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் (பிசி, எம்பிசி, டிஎன்சி) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசால் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் வரும் 29 ஆம் தேதி வரை சமா்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு எண், ஆதாா் எண் விவரங்களைத் தவறாது குறிப்பிட வேண்டும். எனவே, திருச்சி மாவட்ட கல்லூரி முதல்வா்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவா்களுக்கு உதவித் தொகை பெற்று வழங்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News