அவ்வையார் அரசு பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்

தர்மபுரி பேருந்து நிலையம் அருகே அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தொடக்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-09 09:56 GMT

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

தருமபுரி பேருந்து நிலையம் அருகே அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவான ஆண்டு விழா , சைக்கிள் வழங்கும் விழா , வேதியல் ஆய்வகம் திறந்து வைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் .தடங்கம்.பெ.சுப்ரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சுருளிராஜன் , குமார் , வெல்டிங் ராஜா , நகர மன்ற உறுப்பினர் புவனேஸ்வரன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சூர்யா, நகர நிர்வாகி பிரவீன் மற்றும் ஆசிரியர்கள் , கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News